Wednesday, May 9, 2012

அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகியது செம்சுங் கெலக்ஸி SIII


  செம்சுங் கெலக்ஸி SIII நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய கெலக்ஸி SIII யானது பல புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.

இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி SII மற்றும் செம்சுங் கெலக்ஸி நோட் ஆகியனவும் சந்தையில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது.



' ஸ்மார்ட் போன்' என்றாலே செம்சுங் என்ற அளவிற்கு இது பிரபலம் பெற்றது. மேலும் இதுவே செம்சுங்கினை கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் மிகப்பெரும் ஜாம்பவானாக ஆக்கியது.

சந்தையில் உச்சத்தில் இருக்கும் செம்சுங் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பில் தற்போது செம்சுங் கெலக்ஸி SIII இனை வெளியிட்டுள்ளது.

கூகுளின் அண்ட்ரோய்ட் 4.0 ஐஸ் கிரீம் சென்விச் இயங்குதளத்தின் மூலமே இது இயங்குகின்றது.

செம்சுங் கெலக்ஸி SIII தொடர்பான ஒரு பார்வை இதோ: 

செம்சுங் கெலக்ஸி SIII ஆனது தோற்றத்தில் கெலக்ஸி SII வினை விட சற்று பெரியது மட்டுமன்றி வேற்பட்டது.

Dimensions

Samsung Galaxy SIII 136.6 x 70.6 x 8.6 mm Samsung Galaxy SII 125.3 x 66.1 x 8.5 mm



வெள்ளை மற்றும் நீல நிறங்களில் இது வெளியாகியுள்ளது.

'ஹைப்பர்கிளேஸ்' எனப்படும் நவீன உற்பத்திச் செயன்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட பளபளப்பான பிளாஸ்டிக் மூலம் கெலக்ஸி SIII உருவாக்கப்பட்டுள்ளது.

திரை( screen) 

செம்சுங் கெலக்ஸி SIII ஆனது சுப்பர் எமோலெட் (Super AMOLED capacitive touchscreen, 16M colors) தொடுதிரையைக் கொண்டுள்ளது.

இத்திரையானது 4.8 அங்குலமானது. இதன் ரெசலுயுசன் 1280x720 என்பதுடன் படவணு அடர்த்தி 306 (ppi pixel density) ஆகும்.



திரையின் பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass 2 பொருத்தப்பட்டுள்ளது.

கெமரா (Camera) 

செம்சுங் கெலக்ஸி SIII ஆனது 12 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டிருக்குமென ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.



எனினும் 8 மெகாபிக்ஸல் கெமராவினையே இது கொண்டுள்ளது.

இது சற்று ஏமாற்றமளிக்கும் காரணியாகக் காணப்படுகின்றது.

இதன் கெமராவின் இதர அம்சங்கள்:

Primary: 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash
Feature: Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
Video: 1080p@30fps
Secondary: 1.9 MP, 720p@30fps

இதன் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள்: 

ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்டதனைப் போல 'குவாட்கோர்' புரசசர் மூலமே இயங்குகின்றது.

சிறந்த கிரபிக்ஸ் அனுபவத்தினையும் வேகமான செயற்பாட்டினையும் வழங்கக்கூடிய Exynos 4212 Quad Chipset, Mali-400MP GPU, Quad-core 1.4 GHz Cortex-A9 CPU ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

அப்பிளின் ஐ போன் மற்றும் சந்தையில் உள்ள சில கையடக்த்தொலைபேசிகளைப் போல இதுவும் 'மைக்ரோ சிம் கார்ட்' (MicroSIM card) க்கு மட்டுமே இயங்கும்.

பொதுவாக நாம் மேலே கூறிய தொழில்நுட்ப அம்சங்கள் பல ''ஸ்மார்ட் போன்' உலகிற்கு புதிதானவை அல்ல.

குறிப்பாக சுப்பர் எமோலெட் திரையானது செம்சுங்கின் கெலக்ஸி SIII, கெலக்ஸி நோட் உட்பட பல செம்சுங் ஸ்மார்ட் போன்களில் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல 8 மெகபிக்ஸல் கெமராவையே கெலக்ஸி SII வும் கொண்டுள்ளது.

குவாட் கோர் புரசசரினைக் கொண்ட ஸ்மார்ட் போனை எச்.டி.சி. நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. HTC One X என்ற 'ஸ்மார்ட் போனே' கெலக்ஸி SIII இனைப் போல குவாட் கோர் புரசசரினைக் கொண்டுள்ளது.

எனினும் நாம் மேலே கூறியவற்றினை விட பல அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை செம்சுங் கெலக்ஸி SIII கொண்டுள்ளது.

அவை இதோ:

1. S Voice

இவ்வசதியானது குரல் கட்டளைக்கு ஏற்ப சில செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியது.

அதாவது "Hi Galaxy!" என்றவுடனேயே உங்களது போனின் குரல் 'சென்சர்' மற்றும் போனின் திரை விழிப்படைவதுடன் செயற்பாட்டிற்குத் தயாராகிவிடும்.

இதன் மூலம் குரல்கட்டளையை வழங்கி கெமரா மூலம் புகைப்படம் பிடிக்கவும், வொல்யுமை (volume) ஐ கூட்டிக் குறைக்கவும் முடிவதுடன்

குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை அனுப்பவும் முடியும்.

இதைப்போன்ற கட்டளைக்கு ஏற்பட செயற்படும் 'சைரி' என்ற வசதி அப்பிளின் ஐ போனிலும் காணப்படுகின்றது.

2. Motion Detection

நீங்கள் ஒருவருக்கு குறுந்தகவல்களை அனுப்பும் வேளையில் உங்களது செம்சுங் கெலக்ஸி SIII இனை சற்று உயர்த்தினால் தானாக அந்நபருக்கு அழைப்பினை மேற்கொள்ளும் வசதியே இது.

3. S Beam

செம்சுங் கெலக்ஸி SIII ஆனது NFC (Near field communication ) சிப்பினை கொண்டிருப்பதனால் S Beam மூலம் இவ்வசதியைக் கொண்டிருக்கும் இன்னொரு ஸ்மார்ட் போனை ஒட்டியவாறு வைத்திருப்பதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற தகவல்களைப் பரிமாற்றிக்கொள்ள முடியும்.

NFC மற்றும் வை-பை டிரக்ட் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இச்செயற்பாடு நடைபெறுகின்றது.

இதைவிட செம்சுங் கெலக்ஸி SIII உடன் கிடைக்கப்பெறும் All-Share Cast டொங்கலின் உதவியுடன் DLNA (Digital Living Network Alliance) வசதியைக்கொண்டுள்ள தொலைக்காட்சிகளில் செம்சுங் கெலக்ஸி SIII இன் திரையை தோன்றவைக்க முடியும்.



4. Pop Up Play 

இவ்வசதியானது திரையின் எப்பகுதியிலும் வீடியோவை பிளே செய்வதற்கான வசதியினை வழங்குகின்றது.



மேலும் உங்கள் போனில் நீங்கள் வேறு எந்த வேலையைச் செய்துகொண்டிருந்தாலும் உதாரணமாக மின்னஞ்சல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதோ, குறுந்தகவல்களை அனுப்பும் போதோ வீடியோவினைக் கண்டுகளிக்க முடியும்.

5. Burst Shot 

இவ்வசதியானது நீங்கள் செம்சுங் கெலக்ஸி SIII மூலம் புகைப்படமெடுக்கும் போது செக்கனுக்கு 20 வரையான புகைப்படங்களை தன்னியக்கி முறை மூலம் எடுத்துத்தரக்கூடியது.



அவற்றில் சிறப்பானதை நீங்கள் தெரிவு செய்துகொள்ள முடியும் அல்லது உங்களது 'போனே' சிறப்பானதைத் தெரிவு செய்தும் தரும்.

6. Smart Stay

இது கண்ணின் அசைவிற்கு ஏற்ப செயற்படும் தொழில்நுட்பமாகும் ( Eye Recognition Technology). நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனைப் பார்க்கும் போது அதன் திரை தானாக ஒளிரும். நீங்கள் திரையைப் பார்க்காத போது அது செயற்படு நிலையிலிருந்து மாறிவிடும்.

சக்தியை சேமிக்கும் முகமாகவே இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.

இவையே குறிப்பிடத்தக்க வசதிகளாக உள்ளன. இவற்றைத்தவிர HD புரண்ட் கெமரா, புகைப்படங்களில் காணப்படும் நபர்களின் முகங்களை அதிநுட்பமான முகத்தினை இனங்கண்டு கொள்ளும் (face-recognition technology) தொழில்ச்நுட்பம் அதன் மூலம் அப்புகைப்படங்களை உடனே உரிய நபருக்கு அனுப்பக் கூடிய வசதி என செம்சுங் கெலக்ஸி SIII இன் அதி நவீன வசதிகளின் பட்டியல் நீள்கின்றது.

செம்சுங் கெலக்ஸி SII பெற்றதினைப் போன்ற வரவேற்பினை கெலக்ஸி SIII பெறுகின்றதா என பொறுத்திருந்து பார்ப்போம்!

 
___

Tuesday, May 1, 2012

125 பில்லியன் ரூபாய்க்கு இன்ஸ்ராகிராமை கொள்வனவு செய்தது பேஸ்புக்















பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்"இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில்...


”இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக இன்ஸ்ராகிராம் குழுவினருடன் மிக நெருக்கமான தொடர்பினை பேணவிருக்கிறோம். இன்ஸ்ராகிராமும் அதன் பெறுமதியான குழுவினரும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. நமது இணைவின்மூலம் சிறந்த பெறுதியை வழங்குவதற்கு காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஐபோன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிறிய மாற்றங்களைச் செய்து அழகாக்கி பகிரப் பயன்படும் இம்மென்பொருள் தற்போது ஐபோன்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு 27 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனாளர்களைக் கொண்டு காணப்படுகிறது. பேஸ்புக்குடன் இணைந்திருப்பதனால் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'டொய்லெட் சீட்டைவிட அலுவலக கணினி மௌஸில் அதிக கிருமிகள்'

கழிப்பறைகளிலுள்ள டொய்லட் சீட்களில் உள்ளதைவிட சராசரி கணினி மௌஸ்களில் மூன்று மடங்கு அதிகளவான கிருமிகள் காணப்படுவதாக புதிய ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அலுவலக மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள், தமது கணினிகளை கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தம் நிறைந்தவர்களாக காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆண்கள் பயன்படுத்தும் மௌஸ்களிலே 40 வீதம் அதிக பக்ரீறியாக்கள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின்படி, அலுவலகங்களில் மௌஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை (கீ போர்ட்) காணப்படுகிறது.  அதற்கடுத்தாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகள்  அதிக கிருமிகள் கொண்டவையாக உள்ளன.

கழிப்பறையில் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் தாங்கியின் கைப்பிடியை விட கணினி மௌஸ்களில் இரு மடங்கு பக்றீரியாக்கள் காணப்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள், 3 அலுவலக இடங்களிலுள்ள 40 மேசைகளிலிருந்து கைப்பற்றப்பட்ட 158 பொருட்களையும் 28 டொய்லெட் சீட்கள் உட்பட கழிப்பறை பொருட்களை ஆய்வுக்குப் பயன்படுத்தினர்.

தொழில்நுட்ப முகாமையாளரான பீட்டர் பாரட் இது குறித்து தெரிவிக்கையில்,  'தற்போது அலுவலகங்களில் தொழில்புரிபவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உணவு உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து ரைப் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனால் உணவுத் துகள்கள் கணினிகளில் குறிப்பாக, மௌஸ்கள் மற்றும் விசைப்பலகை மீது படிந்துவிடுகின்றன. இதன் மூலம் அப்பொருட்கள்  பக்ரீறியாக்களும் ஏனைய நுண்ணுயிர்களும் பெருகுவதற்கு ஏற்ற இடமாக மாறிவிடுகின்றன.

ஏனெனில் இவை இலத்திரனியல் பொருட்கள் ஆகையால் அடிக்கடி தூய்மையாக்கப்படுவதில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டொய்லெட் சீட்டைவிட அதிக கிருமி கொண்ட பொருள் அலுவலக கணினி மௌஸ் மாத்திரம் அல்ல என்பது மேற்படி ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமையலறை தரை, வாகனங்களின் ஸ்ரீயரிங், உணவகங்களின் கதிரகைள், ஷொப்பிங் ட்ரோலிகள் என்பனவற்றிலும் அதிக கிருமிகள் காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.