Thursday, November 1, 2012

திக்வெல்ல பகுதியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரமொன்று முறிந்து விழுந்துள்ளது. அதனை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு வெள்ளத்தில் மூழ்கியது – நாடு பூராகவும் 50.000 பேர் பாதிப்பு 

கொழும்பில் புதன்கிழமை மாலை பெய்த அடை மழையினால் கின்சி வீதி, நகர மண்டபம், தும்முள்ள சந்தி, டார்லி வீதி மற்றும் இப்பான்வல ஆகிய பிரதேசங்களிலுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் ஹோர்டன் பிளேஸ், கின்சி வீதி, நகர மண்டபம் மற்றும் வார்ட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் வீசிய சூறாவளியினால் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. அவ்வாறான பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, ஹைலெவல் வீதியின் திம்பிரிகஸ்யாய சந்தியில் சற்றுமுன் பாரிய மரங்கள் இரண்டு முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியினுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால், அதனை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திக்வெல்ல பகுதியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரமொன்று முறிந்து விழுந்துள்ளது. அதனை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரத்மலானை கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட கடலரிப்பினால் சுமார் 10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.










நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 13,074 குடும்பங்களைச் சேர்ந்த 49,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் முலட்டியான மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதென அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 503 குடும்பங்களைச் சேர்ந்த 1721 பேர் 9 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடக்கில் மாத்திரம் 35 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Wednesday, October 31, 2012

தொடரும் அடைமழையால் இடம்பெயர்வுகள் அதிகரிப்பு


அனர்த்தங்கள் காரணமாக 1,917 குடும்பங்களைச் சேர்ந்த 7,434 பேர் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
கடும் மழை காரணமாக இதுவரை 68,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது.
44 வீடுகள் முற்றாகவும் 800 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நீலம் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அடுத்த 9 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Wednesday, October 24, 2012

கொரிய மொழி பரீட்சை முடிவுகள் வெளியானது


கொரிய மொழி பரீட்சை முடிவுகள் வெளியானது


கொரிய மொழி பரீட்சையின் முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளைwww.slbfe.lkஎன்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.

கடந்த ஒக்டோபர் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொரிய மொழி பரீட்சையின் ஊடாக சுமார் 4,391 பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tuesday, October 23, 2012

Minhath Pre-School Exhibition 2012



















Dickwella Hajj Cricket Tournament 2012


BLUESTAR kalakathal Hajj perunal anru eatpadu seyapatulla aniku 6 per konda Cricket tournament itkana appilication galai Classic com il 1000/- koduthu petrukollalam 
Idam-Minhath Ground
Date-27/10/2012
Time-11.30