Thursday, April 26, 2012

கூகிள் ட்ரைவ் இன்று வெளியிடப்படுகிறது


கூகிள் ட்ரைவ் இன்று வெளியிடப்படுகிறது



நண்பர்களே கூகிள் நிறுவனத்தின் அடுத்த வரவான கூகிள் ட்ரைவ் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படுகிறது.


கூகிள் ட்ரைவ் 5 ஜிபி வரை இலவ இடமளிக்கிறது ஆன்லைனில்.

பிடிஎப், டாக்குமென்டுகள், வீடியோக்கள், ஆடியோ கோப்புகள் என அனைத்து வகை கோப்புகளையும் சேமித்து  வைத்துக் கொள்ளலாம.

கூகிள் ட்ரைவ் குறித்து கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ கீழே




ட்ராக் அன்ட் ட்ராப் முறையில் பைல்களை சுலபமாக சேமிக்கலாம்.

கூகிள் ட்ரைவில் சேமிக்கும் கோப்புகளை யாருடன் வேண்டுமானலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

அத்துடன் ஐ போன் மற்றும் ஆன்ட்ராய்ட் போன்ற போன்களிலிருந்தும் அணுக முடியும்.


கூகிள் ட்ரைவ் செல்ல சுட்டி

கூகிள் ட்ரைவ் வெளியிடுவதை கொண்டாடும் விதமாக அனைத்தும் ஜிமெயில் உறுப்பினர்களுக்கும் முன்னர் 7.5 ஜிபி இடமளித்த ஜிமெயில் இன்று முதல் 10 ஜிபி என்று உயர்த்தி வழங்குகிறது.  என்ற சந்தோசமான விசயத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பின்னூட்டங்கள் என் தவறை திருத்திக் கொள்ள உதவும்.  உங்கள் ஓட்டு மூலம் அனைத்து தரப்பினரையும் இந்த தகவல் சென்றடைய உதவும்.


நன்றி மீண்டும் வருகிறேன்


Read more:   



http://www.gouthaminfotech.com/2012/04/google-drive-release-today.html#ixzz1t8ULqsWF

Wednesday, April 25, 2012

Jummah Sermon on 27-04-2012

Insha Allah Tomorrow (27-04-2012) Friday Jummah Sermon by Asheik Najumudeen Mufthi (Malahiri) @ Jummah Masjid Dickwella -Board of Trustee-

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயம் தீக்கிரை

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயம் தீக்கிரை


மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக்  கட்டிடம் இனந்தெரியாதோரினால் இன்று வியாழக்கிழமை  அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்மேளன அலுவலக கட்டிடத்தின் முன் கதவு தீயினால் கருகியதுடன்,  ஜன்னல் கதவுகள்  உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களும் இராணுவத்தினரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். படங்கள்:-எம்.சுக்ரி

இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



Dambulla Masjid Attack VIDEO

ஒரு மாதத்திற்கு முன்பு ஜெனீவா விவகாரம் தொடர்பாக இலங்கையைப் பாதுகாக்க தம்புள்ளைப் பள்ளியில் மேற்கொண்ட துஆப் பிரார்த்தனை.






தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்; நோன்பு பிரார்த்தனைக்கு ஜம்இய்யத்துல் உலமா அழைப்பு

கடந்த வாரம் தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்காக நாளை வியாழக்கிழமை 26ஆம் திகதி நோன்பு நோற்கும் படியும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் இதுவரை காலமாக நிலவி வருகின்ற சமூக ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.

சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தூண்டிக்கொண்டுமுள்ளனர். இந்நிலையில் இஸ்லாம் காட்டிய வழிமுறையொன்று இருக்கிறது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நினைவூட்ட விரும்புகிறது.

பிரார்த்தனையே ஒரு முஸ்லிமின் ஆயுதம் என்ற அடிப்படையில் துஆக்கள், தௌபாக்கள், இஸ்திஃபார் மற்றும் சுன்னத்தான நோன்புகள் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்ளும் அதேநேரம் சட்ட ரீதியாகவும் ஒழுங்காகவும் உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுதியாக நிற்கிறது.

கண்டனங்களை உரிய இடங்களுக்கு எத்தச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ஒவ்வொருவரும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ அல்லது வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதோ அல்லது போக்குவரத்துக்கு குந்தகம் விளைவிப்பதோ கூடாது. 

அதேநேரம் ஒட்டுமொத்தமாக எம்மோடு இணங்கி நடக்கும் பௌத்த சகோதரர்களது மனம் புண்படுமாறு நடந்துகொள்ளவும் கூடாத.  அவ்வாறே எமது பள்ளிவாசலை தாக்கினார்கள் என்பதற்காக மதங்களைத் தூற்றுவதை தவிர்ப்பதுடன் நடுநிலைமையானவர்களோடு நன்முறையில் நடந்து அவர்களது உள்ளத்தையும் நாம் வென்றிட வேண்டும். 

இது 'நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்' என்ற அல்குர்ஆனின் அறிவுரையாகும். ஒரு சிலர் பள்ளிவாசல் விடயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம்களாகிய நாம் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது.

எமக்கென இஸ்லாம் கூறியுள்ள வரையறைகளை பேணி நடந்து கொள்ளவே சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அழைக்கும் அதேவேளை, ஜம்இய்யத்துல் உலமா ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனினும்  ஹர்த்தாலில் ஈடுபட விரும்புவோர் இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணி நடக்கவேண்டும் எனவும் வரம்பு மீறும் போது ஏற்படும் விபரீதங்களையிட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், நாளை வியாழக்கிழமை 26ஆம் திகதி நோன்பு நோற்கும் படியும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைவரையும் வேண்டிக்கொள்கின்றது.






Wednesday, April 18, 2012

Janaza - Abdul Rahman (Aasathpura)


  1. Abdul Rahman (Aasathpura) Awerhal Kalamanarhal.Iwer Rahman Nanawin Marumahanin Shahozarar Aawar.

Al - Asadpura funday, Dickwella on Dec 2010

Dickwella Batheegama Hospital

Hajj Cycle Sawary in Dickwella. (2010)

Dickwella Small Attack on Sep 2011

Dickwella Haj festival 2007

Dickwella Jumma Mosque Grand Kandhoori (18-02-2012)

Dickwella Jumma Mosque Grand Kandhoori (18-02-2012)














மின்னல் தாக்குதலால் நால்வர் பலி

மின்னல் தாக்குதல் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, அதுரலிய பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த இரு பெண்களும் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த ஒருவரும் உயிpழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாத்தளை இரத்தோட்டை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மரம் ஒன்றிக்கு தாக்கிய மின்னல் அருகிலிருந்த இவரையும் தாக்கிவுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தோட்டை சேர்ந்த 60 வயதான வேலுப்பிள்ளை அருணாச்சலம் என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்ததாக ன்ற பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் தற்போது மாத்தளை வைத்தியசாiயில் வைக்கப்பட்டுள்ளது. (கிருஷான் ஜீவக ஜயறுக், மொஹொமட் ஆஸிக்)