மின்னல் தாக்குதல் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, அதுரலிய பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த இரு பெண்களும் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த ஒருவரும் உயிpழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மாத்தளை இரத்தோட்டை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மரம் ஒன்றிக்கு தாக்கிய மின்னல் அருகிலிருந்த இவரையும் தாக்கிவுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தோட்டை சேர்ந்த 60 வயதான வேலுப்பிள்ளை அருணாச்சலம் என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்ததாக ன்ற பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் தற்போது மாத்தளை வைத்தியசாiயில் வைக்கப்பட்டுள்ளது. (கிருஷான் ஜீவக ஜயறுக், மொஹொமட் ஆஸிக்)
No comments:
Post a Comment